சென்னை: தமிழகத்தில் பல இடங்களில் வக்பு வாரிய சொத்துகள் முறைகேடாக விற்பனை செய்யப்பட்டு, ரூ.2ஆயிரம் கோடி கைமாறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்  கேள்வி எழுப்பி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ராயபுரத்தில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட  அதிமுகவைச் சேர்ந்த முன்னாள்அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ்நாட்டில், போதை பொருள், கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டியனர்,  போதைப் பொருள் கடத்தல் உட்பட பல்வேறு வழக்குகளில் திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் பலர் சிக்கியுள்ளனர் என கடுமையாக சாடினார்.

தமிழகத்தில் தொழில் துறையும் முடங்கி இருப்பதாக விமர்சித்த ஜெயக்குமார்,  .தமிழகத்தில் பல இடங்களில் வக்பு வாரியசொத்துகள் முறைகேடாக விற்பனை செய்யப்படுவதாகவும், இதன்மூலம் ரூ.2,000 கோடி பணம்  கட்சி தலைைமக்கு கைமாறியதாகவும், இதில் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த ஊழல் குறித்து  தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தொடர்ந்துபேசியவர், கருணாநிதி காயன் வெளியிட்டு விழாவில் பாஜகவினர் கலந்துகொண்டதை விமர்சித்ததுடன், தற்போது திமுக   மத்திய அரசை ஆதரிக்கும் கட்சியாக  மாறிவிட்டது என்றும்,  ஸ்டாலினின் தலைவராக மோடி மாறிவிட்டாரோ என்று நினைக்க தோன்றுகிறது என்றார்.

தமிழகத்தில் பாஜகவுக்கு சொந்த காலும் கிடையாது, செல்வாக்கும் கிடையாது என விமர்சித்தவர்,   அதிமுகவின் தயவில்தான் பாஜக சார்பில் 4 எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்கு சென்றுள்ளனர். இப்படிப்பட்ட கட்சியின் தலைவர் அண்ணாமலை, இரட்டை இலை பற்றி பேசுவது விநோதமாக இருக்கிறது என்று சாடினார்.

கடந்த அதிமுக ஆட்சியில் கூட்டுறவு துறை மூலம் தமிழகம் முழுவதும் ‘அம்மா மருந்தகம்’ தொடங்கி செயல்பட்டது உலகத்துக்கே தெரியும். தமிழக சுகாதார துறை அமைச்சருக்கு மட்டும் தெரியாமல் இருப்பது வேடிக்கை என சுகாதாரத்துறையையும், தமிழ்நாடு அரசையும் கடுமையாக சாடினார்.