சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் விஜய் என தவெக செயற்குழு கூட்டத்தில் மொத்தம் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

விஜய் தலைமையில் நடைபெற்ற தவெக செயற்குழுக் கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்றும், தி.மு.க – பா.ஜ.கவுடன் என்றுமே கூட்டணி இல்லை என்று தவெக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், பரந்தூர் மக்களை நானே தலைமைச்செயலகம் அழைத்து வந்து முற்றுகையிடுவேன் என்றும், அப்போது எந்த பிரச்சனை வந்தாலும் அதனை சந்திக்க தயாராக இருப்பதாகவும் தவெக தலைவர் விஜய் ஆவேசமாக கூறினார்.
. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் கட்சியின் செயற்குழுக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கட்சியின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் கட்சியின் பணிகள், முதல்வர் வேட்பாளர் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், 2026 பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்வர் வேட்பாளர் விஜய் என்றும் கூட்டணி குறித்து விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கப்படுவதாகவும் தவெக செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தவெக தலைமையில்தான் கூட்டணி, கூட்டணி குறித்து முடிவெடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது எனவும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கிறது.
மேலும் அதிமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானங்கள் விவரம்:
தீர்மானம் 1
பரந்தூர் மக்கள் உட்பட விவசாயிகளின் நலன் மற்றும் உரிமைக்காகத் தமிழக வெற்றிக் கழகம் என்றும் துணை நிற்கும்.
தீர்மானம் 2
கொள்கை எதிரிகளுடனோ, பிளவுவாத சக்திகளுடனோ என்றும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி இல்லை.
தீர்மானம் 3
விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிரான அரசின் அதிகார மீறலைக் கண்டிக்கிறோம். மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்.
தீர்மானம் 4
நெல் மற்றும் கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்.
தீர்மானம் 5
பெரும் நட்டத்தை சந்தித்துள்ள மா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை தேவை.
தீர்மானம் 6
மலைக்கோட்டை மாநகரில் நடக்கும் மணல் கொள்ளை தடுக்கப்பட வேண்டும்
தீர்மானம் 7
என்எல்சி-க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு முழுமையான இழப்பீட்டுத் தொகை, குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பு மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரத் தொழிலாளர்களாக்க வலியுறுத்தி தீர்மானம்.
தீர்மானம் 8
விசைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கைகளை முத்தரப்பு பேச்சுவார்த்தை மூலம் நிறைவேற்றக்கோரி தீர்மானம்.
தீர்மானம் 9
திண்டுக்கல் மாவட்டத்தில் வாசனைத் திரவிய ஆலை தொடங்கக் கோரும் தீர்மானம்.
தீர்மானம் 10
தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும்.

தீர்மானம் 11
அரசு ஊழியர்கள் சங்கமான ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு ஆதரவு.
தீர்மானம் 12
அரசு மருத்துவர்களை நம்ப வைத்து ஏமாற்றாமல், கொடுத்த வாக்குறுதியின்படி அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
தீர்மானம் 13
தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்னைக்கு நிந்தரத் தீர்வு காண கச்சத்தீவை குத்தகை அடிப்படையில் மத்திய அரசு கேட்டுப் பெற வேண்டும்.
தீர்மானம் 14
இருமொழிக் கொள்கை தீர்மானம்.
தீர்மானம் 15
தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் [SIR] நடத்துவதன் வாயிலாக சிறுபான்மையினர் வாக்குகளை குறைக்க முயற்சிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.
தீர்மானம் 16
கீழடியில் தமிழர் நாகரிகத்தை மூடி மறைக்கும் மத்திய பாஜக அரசுக்குக் கண்டனம்.
தீர்மானம் 17
தவெக-விற்கு எதிரான திமுக அரசின் அராஜகப் போக்கிற்குக் கண்டனம்.
தீர்மானம் 18
தொகுதி மறுசீராய்வு – ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்குக் கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம்.
தீர்மானம் 19
காவல் துறை விசாரணையின் போது தொடர்ந்து பலர் கொல்லப்படுவதற்கும் அதனைத் தடுக்கத்தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத உள்துறை அமைச்சருக்கும் கண்டனம்.
தீர்மானம் 20
பெரியார், அண்ணாவை அவமதிக்கும் பாஜகவின் பிளவுவாத அரசியலைக் கண்டிக்கும் தீர்மானம்.
இவ்வாறு 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.