மதுரை
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 2 நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது.

பெண் போலீசாரை இழிவுப்படுத்தி பேசிய வழக்கில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கடந்த மே மாதம் 4-ந்தேதி அன்று தேனியில் உள்ள தங்கும் விடுதியில் கோவை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டபோது அவரது காரில் 2½ கிலோ கஞ்சா வைக்கப்பட்டிருந்ததாக தேனி பழனிசெட்டிபட்டி காவல்துறையினரால் கஞ்சா வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார்.
சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்தும் அனைத்து வழக்குகளில் இருந்தும் அவர் கடந்த செப்டம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் ‘யூடியூப்’ மூலம் தமிழக அரசுக்கு எதிராக பரபரப்பு கருத்துகளை முன்வைத்து வந்தார். சவுக்கு சங்கர் மீதான கஞ்சா வழக்கு மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தபோது. வழக்கு விசாரணைக்கு சவுக்கு சங்கர் நேரில் ஆஜர் ஆகவில்லை
எனவே அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவை பிறப்பித்தது. நேர்றி தேனி பழனிசெட்டிபட்டி போலீசார் நேற்று சென்னை வந்து சவுக்கு சங்கரை கைது செய்து மதுரை அழைத்து சென்றனர். இன்று மதுரை போதைபொருள் சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கரை ஆஜர்படுத்தியபோது அவருக்கு 2 நாட்கள் நீதிமன்ற காவல் அளித்து நீதிபதி உத்தவிட்டார். சவுக்கு சங்கர் போலீஸ் காவலுடன் மதுரை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
[youtube-feed feed=1]