சென்னை: சென்னையில் 19 காவல் உதவி ஆணையர்கள் மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பிறகு சென்னை உள்பட மாநிலம் முழுவதும் காவல்துறையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே சென்னையில் காவல் அணையர் உள்பட பல காவல்துறை அதிகாரிகள் மாற்றப்பட்ட நிலையில், தற்போது மேலும் 19 உதவி கால் ஆணையர்கள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்டு உள்ளார்.

அதன்படி,   ஆம்ஸ்ட்டிராங் கொலை நடைபெற்ற பகுதியான,  செம்பியம் காவல் உதவி ஆணையர் பிரவீன் குமார் சென்னை காவல்துறை பாதுகாப்பு பிரிவு உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை காவல்துறை பயிற்சி பிரிவு உதவி ஆணையர் முனியசாமி அண்ணாநகர் உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் 17 உதவி ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.