திருப்பதி

லப்பட புகார்களுக்கு இடையே கடந்த 4 நாட்களில் மட்டும் திருப்பதியில் 14 லட்சம் லட்டுகல் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

திருப்பதி லட்டு தயாரிப்பில் கடலைப்பருப்பு, பசு நெய், சர்க்கரை, முந்திரி, பாதாம், உலர் திராட்சை கொண்டு தயாரிக்கப்படுகிறது. லட்டு தயாரிப்பில் தினமும் 15,000 கிலோ அளவிலான பசு நெய் பயன்படுத்தப்படுகிறது.  ஏழுமலையான் கோவிலில் நைவேத்தியத்துக்காகத் தயாரிக்கப்பட்ட பிரசாதம், பக்தர்களுக்கு வழங்கப்பட்ட லட்டுகளில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் கடந்த ஆட்சியில் விலங்குகள் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக, ஆந்திர மாநில முதல்வர்சந்திரபாபுநாயுடு குற்றம் சாட்டி நெய்யை ஆய்வுக்கு அனுப்பி வைத்ததில் நெய்யில் கலப்படம் செய்திருந்தது உறுதி ஆனது.

இதையொட்டி பரிகாரம் செய்ய அதிகாரிகள், அர்ச்சகர்கள் முடிவு செய்து நேற்று காலை 6 மணியில் இருந்து 10 மணிவரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள தங்கக்கிணறு அருகில் வைகானச ஆகம நியதிப்படி ஆகம ஆலோசகர் ராமகிருஷ்ண தீட்சிதர் மேற்பார்வையில் 8 அர்ச்சகர்கள், 3 ஆகம ஆலோசகர்கள் தலைமையில் பரிகாரப் பூஜை செய்யப்பட்டது.

3 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு யாக பூஜையில் வாஸ்து ஹோமம், பரிகாரப் பூஜைகள் நடத்தப்பட்டன. அதில் வைக்கப்பட்ட புனிதநீர் மூலவர் சன்னதி, பூந்தி மற்றும் லட்டுகள் தயாரிக்கும் கூடம், அன்னப்பிரசாதம் தயாரிக்கும் மடப்பள்ளி, லட்டுகள் விற்பனை செய்யக்கூடிய கவுண்ட்டர்கள், கோவில் வளாகத்தில் உள்ள பல்வேறு சன்னதிகளில் தெளிக்கப்பட்டது.

திருப்பதி லட்டுவை சுற்றி சர்ச்சைகள் வெடித்தாலும் இது லட்டு விற்பனையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று அதன் விற்பனை மூலம் தெரியவந்துள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் 14 லட்சத்திற்கும் மேற்பட்ட லட்டுக்கள் விற்பனை அகியுள்ளன. அதாவது கடந்த 19 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையிலான நான்கு நாட்களில் மட்டும் லட்டு மீதான சர்ச்சை உச்சத்தில் இருந்த நாட்களில் 14 லட்சத்திற்கும் மேற்பட்ட லட்டுக்கள் விற்பனையாகியுள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 3 லட்சத்திற்கும் மேல் லட்டுக்கள் விற்பனையாகியுள்ளது.