சென்னை

மே 11 முதல் மே 17 வரை பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்தோர் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுள் நடைபெற்று முடிந்தது. சுமார் 8.17 லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதிய இந்த தேர்வு முடிவுகளை நேற்று காலை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அண்ணா நூலகத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்கள்,துணைத் தேர்வுகளுக்கு மே 11ம் தேதி முதல் 17 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், வருகை புரியாத தேர்வர்கள், தனித்தேர்வர்களுக்கான துணைத் தேர்வுகளுக்கு மே 11ம் தேதி முதல் 17 வரை விண்ணப்பிக்கலாம்.

இது குறித்த மேலும் விவரங்களுக்கு http://dge.tn.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம். என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.