அமெரிக்கா:

டந்த 72 ஆண்டுகளாக டைம் இதழ் ஆண்டில் சிறந்த மனிதர்களின் பெயர்களை மட்டுமே வெளியிட்டு வந்தது. வழக்கமாக ஜனாதிபதி அல்லது பிரதமர் அல்லது பிரபலமான தொழிலதிபர்கள் பெயர்களே இந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பார்கள். இவர்களின் வராலற்றை பார்க்கும் போது, இவர்கள் உலகலவில் ஆதிக்கம் செலுத்தியவர்களாகவே இருந்தனர்.

கடந்த 1999-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட பட்டிலில் சிறந்த மனிதர் தேர்வு செய்யப்பட்டு டைம் இதழ் வெளியிட்டது. இந்த பட்டியலில் பெயர்கள் மாறினாலும், தேர்வு முறை ஒரே மாதிரியாகவே இருந்தது. இந்நிலையில் 100 ஆண்டுகாலத்தில் சாதனை படைத்த சிறந்த பெண்களுக்கான பட்டியலை டைம் இதழ் தற்போது வெலியிடப்பட்டுள்ளது. உலக தலைவர்களாக கோல்டா மீர் மற்றும் கொராஸன் அக்வினோ போன்ற ஆண்கள் தேர்வு செய்யப்பட்டாலும் இவர்களின் வெற்றிக்கும் உதவியது பெண்களாக இருந்துள்ளது தெளிவாக தெரிகிறது.

இதுகுறித்து டைம் இதழின் முன்னாள் ஆசிரியர் நான்சி கிப்ஸ் எழுதிய கட்டுரையில், பெண்கள் எந்த வகையில் தலைவர்கள் வெற்றிக்கு உதவினார்கள் என்பதை அறிந்து கொள்வதற்காகவே தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ”பெண்கள்” மென்மையான ஆற்றல் கொண்டிருந்தாலும் சிறப்பாக செயல் புரிவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பெண்களை அங்கீகாரம் செய்யும் வகையில், நாங்கள் 89 புதிய டைம் இதழ் அட்டை படத்தை உருவாக்கியுள்ளோம். இதில் பெரும்பாலனாவை பிரபலமான டிசைனர்களை கொண்டு உருவாக்கப்பட்டதாகும். இதில் சிறந்த பெண்கள் இடம் பெற்றிருந்த 11 அட்டை படங்களில் நாங்கள் எந்த மாற்றமும் செய்யமால் அப்படியே விட்டு விட்டோம். 100 பேர் கொண்ட பட்டியலை தயாரிக்க எங்களுக்கு ஒரு மாத கால தேவைப்பட்டது. இதில் 600-க்கும் மேற்பட்டவை டைம் இதழின் ஊழியர்கள், நிபுணர்கள், எங்கள் கிரியேட்டிவ் பார்ட்னர், திரைப்பட தயாரிப்பாளர் அல்மா ஹார்ல் மற்றும் பல்வேது துறைகளை சேர்ந்த பெண்கள் போன்றவரகளால் பரிந்துரைக்கப்பட்டவையாகும்.

இந்த தேர்வு பல்வேறு கேள்வி-பதில்கள் பெறப்பட்ட பின்னரே செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஒரு பெண்ணாக இருப்பதன் அர்த்தம் என்ன?, பெண்களின் பங்களிப்புகளை சமூகம் ஏன் ஏற்று கொள்ள தவறி விட்டது? என்று கேள்வி கேட்கப்பட்டது. இந்த கேள்விகளுக்கு பெண்கள் ஆர்வலர்களின் ஒருங்கிணைப்பாளர் குளோரியாவிடம் கிடைத்தது. இவர் 1970-ஆம் ஆண்டில் டைம் இதழால் தேர்வு செய்யப்பட்டவர். இவர் எழுதிய கட்டுரையில், அந்த ஆண்டு பெண்கள் அதிக வெற்றி பெற்றால் எப்படி இருகும் என்பது குறித்து எழுத்தினார். அதில், இது ஒரு அரிய வாய்ப்பு கிடைத்தால், 50 ஆண்டு மாற்றத்தை பிரதிபலிக்கும் என்று குறிப்பிட்டு இருந்தார்.