ராமேஸ்வரம்

லங்கை கடற்படையினர் 10 தமிழக மீனவர்களை கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் நடைபெற்று வருகிறது.  தற்போது மீண்டும் இது போல ஒரு சம்பவம் நடந்துள்ளது.

ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்று நெடுந்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் 10 பேரை கைது செய்து இரண்டு விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.

இலக்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 10 மீனவர்களும் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுஅவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது. தமிழக மீனவர்கள் சிலர் ஏற்கனவே இலங்கை சிறையில் உள்ள நிலையில், மேலும் 10 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவ கிராமங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.