திருப்பதி

திருப்பதி வனப்பக்குதியில் தடை செய்யப்பட்ட இடத்துக்குள் அத்துமீறி நுழைந்த 10 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை காவல்துறையினர் செர்லோபள்ளி வழியாக வனப்பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டபோது வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த ஒரு கும்பலை பிடிக்க முயன்றனர்  அவர்களில் சிலர் தப்பியோடிய நிலையில் 10 பேர் பிடிபட்டனர்.

காவல்துறையினர் பிடிபட்டவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பாபு, பாலமுருகன், பிரபு, ரஜினிகாந்த், கந்தசாமி, ரமேஷ், கிருஷ்ணமூர்த்தி, மணிகண்டன், கார்த்தி, ராம்குமார் என்றும், செம்மரங்களை வெட்ட வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்ததாகக் கூறினர்.

இவர்கள் 10 பேரையும் காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்து 7 கோடரிகள், கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  காவல்துறையினர் தப்பியோடியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.