சென்னை

ன்று நடந்த சென்னை விமான சாகச நிகழ்ச்சியை 10 லட்சம் பேர் க்னடு களித்தால் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

சென்னை மெரினாவில் இந்திய விமானப் படையின் 92-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, விமானப் படையினரின் சாகச நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இந்த நிகழ்வை காண்ம் சென்னை மெரினாவையொட்டிய காமராஜர் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லத்துக்கு நேர் எதிரில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

சென்னை மெரினா கடற்கரைக்கு லட்சக்கணக்கான மக்கள் நேரில் வந்து விமானப் படையின் சாகச நிகழ்ச்சியை கண்டு களித்தனர். இந்த நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், தலைமை ஏர் மார்ஷல் ஏ.பி.சிங், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு மற்றும் அரசு உயர் அதிகாரிகளும் நேரில் கண்டனர்

நிகழ்ச்சி பாராசூட் சாகசத்துடன் தொடங்கி பயிற்சி பெற்ற ஆகாஷ் கங்கா குழுவினர் பாராசூட் மூலம் வானில் இருந்து குதித்து சாகசம் செய்தனர். பிறகு ஹெலிகாப்டர்களில் மெரினா கடற்கரையை வட்டமடித்தபடி வலம் வந்து பணயக் கைதிகளை ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் இறங்கி மீட்பதுபோல் வீரர்கள் சாகசம் செய்தனர். மேலும் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தி பார்வையாளர்களை பிரமிப்படையச் செய்தனர்.

குறிப்பாக வானில் வட்டமிட்ட ஹெலிகாப்டர்கள் ஆகாயத்தில் இதயம் வரைந்தது பார்வையாளர்களின் மனம் கவர்ந்தன. மக்களை சி17 ரக விமானத்தின் மகாபலி சூர்யகிரண் அணிவகுப்பு (SKAT) வியப்பில் ஆழ்த்தியது. சூரியனை நோக்கியபடி சீறிப்பாய்ந்த சூர்யகிரண் விமானங்கள் வானில் வட்டமடித்து சுழன்று வந்து மூவர்ண கொடியை வரைந்து சாகசத்தில் ஈடுபட்டன.

விமானப் படையினரின் சாகச நிகழ்ச்சி சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. இதை சுமார் 10 லட்சம் பேர் நேரில் கண்டு களித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவடு  உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்ற ராணுவ நிகழ்ச்சி என்று லிம்கா சாதனை புத்தகத்தில் சென்னை விமான சாகச நிகழ்ச்சி இடம்பெற உள்ளது.