சென்னை: தமிழ்நாட்டில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், சென்னை விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள ஒரு கிலோ கொகைன் போதை பொருள் கடத்தி வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்னாப்பிரிக்கா நாட்டிலிருந்து சென்னைக்கு, விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட, ரூ.10 கோடி மதிப்புடைய, ஒரு கிலோ கோக்கையின் போதைப் பொருள், சென்னை விமான நிலையத்தில் சிக்கியுள்ளது. இதையடுத்து, அந்த பெண்ணை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ரூ.10 கோடி மதிப்பிலான 1 கிலோ கிராம் கோகைபன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே கடந்த மே மாதம் வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.22 கோடி மதிப்பிலான கொக்கைன் உள்ளிட்ட போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சமீப காலமாக சென்னைக்கு வெளிநாடுகளில் இருந்து போதைபொருள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. ஏற்கனவே கப்பல்கள்மூலம் குஜராத் துறை முகம் வந்து, மற்ற இடங்களுக்கு அனுப்பப்பட்ட வந்த நிலையில், கடற்பாதுகாப்பு  மற்றும் கப்பலில் வரும் பொருட்களின் அதிக கவனம் செலுத்தப்பட்டது. இதையடுத்து தற்போது விமானம் மூலம் கடத்தப்படுவது அதிகரித்து உள்ளது.

கடந்த ஆண்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் திமுக பிரமுகர் 2,000 கோடி போதைப் பொருள் கடத்தலில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக், நடிகர் மைதீன், அரசியல் பிரமுகர் சலீம் சிக்கினர். இதைத்தொடர்ந்து அடிக்கடி சென்னை  உள்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் போதைபொருள் பறிமுதல் செய்யப்படுவது அதிகரித்து உள்ளது. இநத் நிலையில்,  சென்னைக்கு பெரிய அளவில் போதை பொருள் கடத்தி வரப்படுவதாக, மத்திய போதை தடுப்பு பிரிவான என்.சி.பி எனப்படும், நார்கோடிக் கண்ட்ரோல் பீரோவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து என்.சி.பி தனிப்படையினர், சென்னை சர்வதேச விமான நிலையத்தில், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

அப்போது, விமான நிலையத்திற்கு  தென்னாப்பிரிக்காவில் இருந்து இருந்து, எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம்  வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை, என்.சி.பி மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்துக் கொண்டு இருந்தனர். அப்போது பெண் ஒருவர் என்பவர் சுற்றுலா பயணி விசாவில், தென்னாப்பிரிக்காவில், அடிஸ் அபாபாவிலிருந்து, விமானத்தில் சென்னை வந்திருந்தார். அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் முறையான பதில் அளிக்காத நிலையில்,  அவரை தனி அறைக்கு அழைத்து சென்று முழுமையாக பரிசோதித்தனர். அப்போது அவர் வைத்திருந்த டிராலி டைப் பையின் அடிப்பாகத்தில், ரகசிய அறை இருந்தது தெரிய வந்தது. அதைத் திறந்து பார்த்த போது, அதனுள் போதை பவுடர் இருந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அந்த பெண்  பயணியை, என்.சி.பி அதிகாரிகள் தங்களுடைய சென்னை அலுவலகத்திற்கு அழைத்து சென்று, தீவிர விசாரணை நடத்தினர். அதோடு அந்த போதை பவுடர், என்ன ரக போதைப் பொருள் என்பதை கண்டறிவதற்காக, ரசாயன ஆய்வுக்கூடத்திற்கும் அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில் இந்த போதை பவுடர், அதிக சக்தி வாய்ந்த கோக்கையின் போதைப் பொருள் என்று தெரிய வந்தது. அந்த நைஜீரியா பயணி கடத்தி வந்த போதைப் பொருளின் மொத்த எடை ஒரு கிலோ. அதன் சர்வதேச மதிப்பு ரூ.10 கோடி என்பது தெரிய வந்தது. மேலும் நடத்தப்பட்ட விசாரணையில்,   இந்த போதை பொருளை கடத்தும் நபர் காண்ட்ராக்ட் முறையில் பணியில் இருந்து வருவதும் தெரிய வந்தது.  இவர் ஒவ்வொரு முறை இந்தியா வரும்போது, இதுபோன்று போதைப் பொருட்களை கடத்தி வருவதும், அதற்கு குறிப்பிட்ட அளவு  ஊதியம் வழங்கப்படுவதும் தெரிய வந்தது.

இந்த முறை இந்த போதை பொருளை, அடிஸ் அபாபாவிலிருந்து, விமானத்தில் சென்னைக்கு கடத்திக் கொண்டு வந்து, சென்னையில் இருந்து ரயில் மூலம், மும்பை சென்று, அங்கு இந்த போதைப் பொருளில் பாதி அளவில், மும்பையில் உள்ள போதை கடத்தும் கும்பல் இடம் ஒப்படைத்து விட்டு, மீதி பாதி போதை பொருளை, மும்பையில் இருந்து ரயில் மூலம் டெல்லிக்கு எடுத்து சென்று, டெல்லியில் உள்ள போதை பொருள் கடத்தும் கும்பல் இடம் ஒப்படைக்க இருந்ததாகவும் கூறினார்.

அதிகாரிகள் மும்பை, டெல்லி மாநகரில் உள்ள என்.சி.பி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, மும்பை, டெல்லியில் போதை பொருளை வாங்க இருந்த, சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள் யார்? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மும்பை டெல்லிக்கு கொண்டு செல்ல வேண்டிய போதைப்பொருள், சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு வந்தது ஏன்? என்றும் என்சிபி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.