சென்னை: தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 5,776 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகி யுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,69,256 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில் மட்டும் 1,42,603 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று ஒரே நாளில் 949 பேர்  தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று  வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 7 பேருக்குத் தொற்று இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.  சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 4,827 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தற்போது 64 அரசு ஆய்வகங்கள், 97 தனியார் ஆய்வகங்கள் என 161 ஆய்வகங்கள் உள்ளன.

தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 51,215.

மொத்தம் எடுக்கப்பட்ட  சளி மாதிரிகளின் எண்ணிக்கை 53,79,011.

இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 80,503.

மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 2,83,073 பேர். பெண்கள் 1,86,154 பேர். மூன்றாம் பாலினத்தவர் 29 பேர்.

இன்று தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 3,369 பேர். பெண்கள் 2,407 பேர்.

இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 5,930 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 4,10,116 பேர் .

இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 89 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 36 பேர் தனியார் மருத்துவமனையிலும், 53 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர்.

இதில் சென்னையில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 7,925ஆக உள்ளது. இதில் சென்னையில் மொத்தம் 2,878 பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 82 பேர். எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 7 பேர்.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.