சென்னை
தமிழகத்தில் இன்று 11,993 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 33,87,322 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,30,841 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 6,21,47,423 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 11,993 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் வெளிநாடுகளில் இருந்து 4 பேர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து 8 பேர் வந்துள்ளனர். இதுவரை 33,87,322 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் இன்று 30 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 37,666 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 23,084 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 31,82,778 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது 1,66,878 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 1,751 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 7,38,513 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் இன்று 7 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 8,977 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இன்று 4,015 பேர் குணம் அடைந்து மொத்தம் 7,02,357 பேர் குணம் அடைந்துள்ளனர்.
தற்போது சென்னையில் 27,179 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 1,751 உடன் இரண்டாம் இடத்திலும் செங்கல்பட்டு 1,197 உடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

மொத்த பாதிப்பில் இரண்டாவதாக உள்ள கோவை மாவட்டத்தில் 3,19,723 பேர் பாதிக்கப்பட்டு 2,578 பேர் உயிர் இழந்து 2,97,214 பேர் குணம் அடைந்து தற்போது 19,931 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மொத்த பாதிப்பில் மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது. இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,29,328 பேர் பாதிக்கப்பட்டு 2,630 பேர் உயிர் இழந்து 2,15,359 பேர் குணம் அடைந்து தற்போது 12,669 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
[youtube-feed feed=1]