22-1434956158-vijay-mallya-flight-600
 
ங்கிகளில் கோடிக்கணக்கான ரூபாய் வாங்கி, திருப்பிச் செலுத்தாத விஜய் மல்லையா, நாட்டைவிட்டு ஓடிவிட்டதாக செய்தி பரவி உள்ளது.
பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா, பல்வேறு வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் வாங்கி , அதை திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றி வருகிறார். இவரது கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை வைத்து  வாங்கிய கடன் தொகை 6,963 கோடி ஆகும்.   இந்த கடனை வசூலிக்க 17 பொதுத்துறை வங்கிகளின் கூட்டமைப்பு  போராடி வருகின்றன.
விஜய் மல்லையா நாட்டை விட்டு வெளியேறாமல் இருக்க  எஸ்.பி.ஐ. தலைமையிலான பொதுத்துறை வங்கிகள் கூட்டமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று வழக்கு தொடர்ந்தது.  இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் நிலையில், விஜய் மல்லையா தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.
அவர், சில தினங்களுக்கு முன்பாகவே வெளிநாடு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து அவரது செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘விஜய் மல்லையா எங்கிருக்கிறார் என்று தகவல் இல்லை. இ-மெயில் மூலமாக மட்டும் தான் அவர் தொடர்பு கொள்கிறார்’ என்று தெரிவித்தார்.
ஐ.பி.எல் முறைகேடு வழக்கில் இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ள லலித் மோடியை போல் இவரும் தலைமறைவாகிவிட்டாரா என்ற அச்சம் எழுந்துள்ளது.