12928139_10201340798999478_16387639115086894_n
 
போய் வா … வானிலையே…. எமக்கு மழை தந்தாய்; புயல் தந்தாய்;
எம் பிள்ளைக்கெல்லாம் விடுமுறை தந்தாய்.

மாணவர்கள் மட்டுமே  வாக்களிக்கும் தேர்தல் நடந்தால்
நீ மட்டுமே நிரந்தர முதல்வர்!
சென்னை வெள்ளத்தின் உன் சிற்றெறும்புத் தகவல் குறட்டை ஒலிகளால்
நசுக்கப்படாமல் இருந்திருந்தால் பேரழிவில் மீண்டிருப்போம்
பெருந்துயரைத் தடுத்திருப்போம்!
உன்னை எப்படித்தான் ‘கலாய்த்தாலும்’ உன் கம்பீரக் குரலின்
காந்தம் குறைவதில்லை!
அடைமழை காலங்களில் வானிலையே ஆட்சி
அதற்கு, உன் தொலைக்காட்சிக் குரலே சாட்சி!
வானிலைகள் மாறலாம்,…மாறுமா…வரலாற்றில் உன் பெயரும்?
சென்னை வானிலை மையம் உன்னை வழியனுப்பி வைத்தாலும்
எல்லோர் நெஞ்சங்களிலும் நீயே நிறைந்திருப்பாய் !
ஏனெனில் நீ வானிலை அல்ல…வாழ்நிலை!
பழ.அசோக்குமார்