திருப்பாவை
ஏற்றகலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல்பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே!அறிவுறாய்;
ஊற்றமுடையாய்! பெரியாய்!உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே!துயிலெழாய்;
மாற்றார் உனக்கு வலிதொலைந்துஉன்வாசற்கண்
ஆற்றாதுவந்து உன்னடிபணியுமாபோலே,
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோரெம்பாவாய்
(நாளை 22ம் பாடல்).