சென்னை

ன்றும் நாளையும் தமிழகத்தின் வட உள்மாவட்டங்களில் பல இடங்களில் வெயில் சுட்டெரிக்கும் என்றும், சில இடங்களில் இயல்பைவிட 9 டிகிரி வரை வெப்ப அளவு கூடும் என்றும், இதனால் நிர்வாக ரீதியாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நாளுக்கு நாள் தமிழகத்தில்அதிலும் குறிப்பாக வட உள் மாவட்டங்களில் வெப்பம்  அதிகமாக இருப்பதை பார்க்க முடிகிறது. இதில் ஈரோடு, சேலம், கரூரில் தாங்க முடியாத அளவுக்கு வெயில் கொளுத்தி எடுக்கிறது. நேற்று முன்தினம் இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவாக கரூரில் 111 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து வெப்பம் பதிவாகி இருந்தது.

நாளை முதல் அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் தொடங்க உள்ளது. நாம்  25 நாட்கள் இதன் தாக்கத்தை பல இடங்களில் உணர முடியும். இம்முறை கத்தரி வெயில் தொடங்குவதற்கு முன்னதாகவே 110 டிகிரி வெயில் அளவு கடந்துவிட்டது. இந்த ஆண்டு முன்கூட்டியே சூரியன் சுட்டெரிக்க தொடங்கி உள்ளதால் இன்னும் கத்தரி வெயில் காலத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை எதிர்கொள்ளப் போகிறோம்? என்பதை கணிக்க முடியாத சூழல் உள்ளது.

தமிழகத்தின் வட உள் மாவட்டங்களான திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூரில் அனேக இடங்களில் இன்றும், நாளையும்  வெப்ப அலை வீசுவதோடு, வெயில் சுட்டெரிக்கும் எனவும், இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வரை, அதாவது 9 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்ப அளவு கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இந்த பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.