
சிம்புவை வைத்து தான் இயக்கும் “அச்சம் என்பது மடமையடா”வை ஒருவழியாக முடித்துவிட்டு, அடுத்தபடத்துக்கு தயாராகிவிட்டார் கௌதம் மேனன்.
“என்னை நோக்கி பாயும் தோட்டா” என்ற அந்த படத்தில் தனுஷ் நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகிவிட்டன.
இப்போது அந்த படத்தைப் பற்றி ஒரு புது செய்தி. ஏற்கெனவே சிம்புவை வைத்து, “விண்ணைத்தாண்டி வருவாயா” படத்தை கௌதம் மேனன் இயக்கினார் அல்லவா? அந்த படத்தின் இரண்டாம் பாகம்தான், இந்த “எ.நோ. பா.தோ” படமாம்!
இரண்டாம் பாகத்தையும் சிம்புவை வைத்து இயக்கத்தான் கௌதம் மேனன் விரும்பினாராம். ஆனால், சிம்புவின் வம்புகளை, அனுபவித்து, போதுமடா சாமி என சிம்புவை அம்போவென விட்டுவிட்டாராம்.
இப்போது சிம்பு நடித்த வேடத்தின் தொடர்ச்சியாக, தனுஷ் நடிக்கிறார்!
Patrikai.com official YouTube Channel