சென்னை

ன்று இ மெயில் மூலம் சென்னை செண்டிரல் ரயில் நிலையட்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது/

சென்னை செண்டிரல் ரயில் நிலையம் தமிழகத்தின் மிகவும் முக்கிய, பரபரப்பான ரயில் நிலையங்களில் ஒன்றாகும் இங்கு. தினமும் இங்கு லட்சக்கணக்கான மக்கள் ரெயில் பயணங்களை மேற்கொள்கின்றனர்.

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. செண்டிரல் ரயில் நிலைய பார்சல் அலுவலகத்திற்கு வந்த இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

செண்டிரல் ரயில் நிலையத்தில் மோப்பநாய் உதவியுடன் ரெயில்வே போலீசார் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.