சென்னை

ன்று பதவி ஏற்ற 4 அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாக்கா விவர்ம வெளியாகியுள்ளது.

தமிழக அமைச்சரவையில் வி.செந்தில்பாலாஜி, கோவி செழியன், ஆர்.ராஜேந்திரன், எஸ்.எம். நாசர் ஆகியோரை புதிதாக அமைச்சர்களாக நியமிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி அதற்கு நேற்று ஒப்புதல் அளித்தார்  இன்று  மதியம் 3.30 மணி அளவில் ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது பதவியேற்பு உறுதிமொழியும், ரகசிய காப்பு உறுதிமொழியும் புதிதாக பதவியேற்ற அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி செய்துவைர்த்தார்.

ஆர்.ராஜேந்திரன், செந்தில் பாலாஜி, கோவி செழியன், எஸ்.எம்.நாசர் வரிசையாக அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் புதிதாக பதவியேற்ற 4 அமைச்சர்கள் உள்பட அனைத்து அமைச்சர்களும் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். சற்று நேரத்தில் புதிதாக பதவியேற்ற நான்கு அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

ஆர்.ராஜேந்திரனுக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி ஏற்கனவே வகித்து வந்த மின்சாரம், மதுவிலக்கு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதோடு கூடுதலாக ஆயத்தீர்வைத்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்ததாக கோவி செழியனுக்கு உயர்கல்வித்துறையும், சா.மு.நாசருக்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.