tv break
உலகக் கோப்பை 20‍ 20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுடன் மோதும்போது பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தால் டிவி பெட்டிகள் தானாகவே வெடித்துச் சிதறும் வகையில் புதுவகை டிவியை பாக்ஸ்தான் நாட்டு பொறியாளர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. அதிலும் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதும் நாட்களில் கிட்டத்தட்ட ஒரு யுத்தக்களம் போலவே இரு நாட்டு ரசிகர்களும் உணர்ச்சி பொங்க கொந்தளிப்பார்கள். இதில் பாகிஸ்தான் ரசிகர்கள் ஒருபடி மேலே போய் இந்தியாவுடன் மோதி பாகிஸ்தான் அணி தோற்றுவிட்டால் டிவி பெட்டிகளைப் போட்டு அடித்து நொறுக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அந்த அளவிற்கு இந்தியாவின் வெற்றியை ஏற்றுக் கொள்ளமுடியாத வெறியர்களாக  உள்ளனர். இந்த நிலையில் பாகிஸ்தான் பொறியாளரான இம்ரான் அகமது  ஒரு புதுவகை டிவியை உருவாக்கி உள்ளார். இவர் தாலிபான்களுக்கு வெடிகுண்டுகள் தயாரிக்கும்  தொழிலில் ஈடுபட்டிருந்தவர். அவர்தான் தற்போது தானாகவே வெடிக்கும் டிவியை பாகிஸ்தான் ரசிகர்களுக்காகவே வடிவமமைத்து விற்பனை செய்து வருகிறார்.
இதுபற்றி பாகிஸ்தான் ரகிரிக்கெட் ரசிகர்கள் கூறியதாவது:‍ கடந்த போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும்போது டோனி இறுதியில் ஒரு சிக்சர் அடித்து இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அப்போது நாங்கள் பார்த்துக் கொண்டிருந்த இம்ரான் அகமது உருவாக்கிய டிவி தானாகவே வெடித்தது. இது மிகப்பெரிய  அற்புதமான வடிவமைப்பு. முன்பெல்லாம் இந்தியாவுடன் மோதி பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தோற்கும்போதெல்லாம் நாங்கள் பெரும் சக்தியை வெளிப்படுத்தி ஆக்ரோஷமாக டிவியை உடைத்து நொறுக்குவோம். இப்போது அதற்கு வேலையே இல்லை.  அப்படி உடைக்கும்போதும் பலருக்கும்  காயங்களும் உடல் பாதிப்புகளும் ஏற்படும் . தற்போது அதற்கு பிரச்சினை இல்லை ஏனெனில் பாகிஸ்தான் தோல்வி என்றால் டிவிபெட்டி தானாகவே வெடித்து விடும்.இதனால் இது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தரும் கண்டுபிடிப்பு.
இவ்வாறு பாகிஸ்தான் ரசிகர்கள்  தெரிவித்தனர்.
இந்த கண்டுபிடிப்பை இன்னும் மேம்படுத்தவும் இம்ரான் அகமது திட்டமிட்டுள்ளார். அதாவது டிவிபெட்டி உடைத்து தீப்பிழம்புகளுடன் காட்சியளிப்பதை தானாகவே ஷெல்பி எடுத்து தேவையான பட விளக்கத்துடன் பேஸ்புக்கில் பதிவிடவும் திட்டமிட்டுள்ளார்.
இம்ரான் அகமதுவின் இந்த டிவிக்கு பாகிஸ்தான் முழுவதும் நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இதுதொடர்பாக இம்ரான அகமதுவிடம் விலைக்கு வாங்குவதற்கு விசாரித்த வண்ணம் உள்ளனர்.
2 நாட்களுக்கு முன்பு நடந்த இந்தியாவுடனான மோதலில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது. இதனைப் பொறுத்துக் கொள்ளமுடியாத பாகிஸ்தான் ரசிகர்கள் ஏராளமான டிவி பெட்டிகளை உடைத்து நொறுக்கினர். இதனால் நியூசிலாந்துடன் மோதி ‍ பாகிஸ்தான் அணி தோற்ற‌ போட்டியைக் காண பெரும்பாலான ரசிகர்களிடம் டிவி பெட்டிகள் இல்லாததால் நாடு முழுவதும் இப்போட்டி கண்டுகொள்ளப்படவில்லையாம்.