2014ல், இரண்டே நாட்களில் 400 டண்ணுக்கு மேல் வெடிகுண்டு காசா மீது இஸ்ரேல் வீசியது. காசாவில் எங்கும் குழப்பமும் அழிவுமாக இருந்தபோது, பாலெஸ்டின பெண்மணி ஒருவர் தன்னுடைய பூந்தோட்டதில் கண்ணீர்ப்புகை குப்பிகளில் மண்ணை நிரப்பி பூக்களை வளர்த்து வந்தார். இரு அரசுக்கும் இதைவிட ஒரு தெளிவான செய்தியை வேறெவராலும் கூறியிருக்க முடியாது.
“மலரோடு மலரிங்கு மகிழ்ந்தாடும் போது, மனதோடு மனமிங்கு பகைகொள்வதேனோ” என்ற கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல் வரிகளே நினைவிற்கு வருகிறது.