![06-1446786558-vaiko-mother-11-600](http://patrikai.com/wp-content/uploads/2015/11/06-1446786558-vaiko-mother-11-600.jpg)
நேற்று மறைந்த வைகோவின் தாயர் மாரியம்மாள் அவர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் அறிக்கை இயல்பாக யதார்த்தமாக இருக்கிறது.
அந்த அறிக்கையில் கி.வீரமணி கூறியுள்ளதாவது:
“ம.தி.மு.க. பொதுச்செயலாளர் அருமைச் சகோதரர் வைகோ அவர்களின் அன்னையார் மாரியம்மாள் (வயது 95) மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம்.
மறைந்தவர் வைகோ அவர்களுக்கு அன்னையார் மட்டுமல்ல; வைகோ அவர்களின் பொதுத் தொண்டுக்கும், பொது வாழ்வுக்கும் ‘ஆசி’ வழங்கும் ஊக்கச் சக்தியாகவும் இருந்தவர். அவரே பல பொது நிகழ்ச்சிகளில் நேரடியாகப் பங்குகொண்டும் உள்ளார்.
சகோதரர் வைகோ அவர்களைப் பெரிதும் பாதிக்கக்கூடிய நிகழ்வு என்பதில் அய்யமில்லை.
![ea8e5e58-7502-4ec3-be81-98fabbd9bcca_S_secvpf.gif](http://patrikai.com/wp-content/uploads/2015/11/ea8e5e58-7502-4ec3-be81-98fabbd9bcca_S_secvpf.gif.jpg)
பெருந்துயரத்தில் மூழ்கியிருக்கும் குடும்பத்தினருக்கும் நமது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.”
– இவ்வாறு தனது அறிக்கையில் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.