டெல்லி
நேற்று இந்தியாவில் திடீரென வாட்ஸ்அப் சேவை முடங்கியதால் பயனர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
அண்மையில் இந்தியா முழுவதும் பல இடங்களில் யு.பி.ஐ.(UPI) சேவைகள் முடங்கியது தெரிந்ததே. அவ்வரிசையில் நேற்று பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ் அப், இந்தியாவில் திடீரென முடங்கியது.
இதனால் வாட்ஸ் அப் செயலியில் தகவல்களை அனுப்பவோ, பெறவோ முடியாத சூழல் ஏற்பட்டதால் பயனர்கள் மிகவும் அவதியடைந்தனர். இதையொட்டி, வாட்ஸ் அப் பயனர்கள் டவுன் டிடெக்டர் வழியாக தங்களது சிக்கல்களை புகாராக அளித்தனர்.
நிகழ்நேர செயலிழப்பு கண்காணிப்பு சேவையான டவுன் டிடெக்டர், சுமார் 81 சதவீத பயனர்கள் தகவல்களை அனுப்புவதில் சிக்கல்களை எதிர்கொண்டதாகவும், 16 சதவீதம் பேர் ஒட்டுமொத்த பயன்பாட்டு செயல்பாட்டில் சிக்கல்களை சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளது.
ஆனால் இதுவரை வாட்ஸ் அப் முடக்கத்திற்கான காரணம் குறித்து அதன் தாய் நிறுவனமான மெட்டா சார்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியிடப்படவில்லை,