பரிமலை

மாசி மாத பூஜைக்காக நேற்று சபரிமலை  ஐயப்பன் கோவில்  நடை திறக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் தேதி சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு கால பூஜைகளுக்குப் பின்னர் நடை சாத்தப்பட்டது.  இன்று மாசி மாதம் பிறக்க உள்ளதால் மாதாந்திர பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு, நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.

கோவில் நடை திறக்கப்பட்டதும் மேல் தந்திரி கண்டரர், ராஜீவரர் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி தீபம் காண்பித்தார். இன்ரு காலை 5 மணிக்கு நடை திறந்ததும் நெய் அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறுகின்றன. அதிகாலை 5 மணி தொடங்கி மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணி தொடங்கி இரவு 10 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும்.

இன்று முதல் 17-ஆம் தேதி வரையிலும் தினமும் நெய்யபிஷேகம் ,கலசாபிஷேகம், படிபூஜை உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெறும். வரும் 17 ஆம் தேதி இரவு 7 மணிக்கு படிபூஜை முடிந்ததும் 10 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.