சென்னை

தொடர் விடுமுறைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் திரும்பி வருவதால் பெருங்களத்தூரில் நேற்றிரவு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் தங்கியிருந்து பணிபுரியும் மக்கள் ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் வார விடுமுறை என தொடர் விடுமுறை காரணமாக தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று அங்கு விடுமுறையை மகிழ்ச்சியுடன் கழித்தனர்.

விடுமுறை நிறைவடைந்த நிலையில், வெளியூர்களுக்கு சென்றிருந்த மக்கள் நேற்றிரவு சென்னை திரும்பி வருகின்றனர்.மேலும் இவ்ர்களில் சிலர் தங்களது சொந்த வாகனங்கள் மூலமாகவே சென்னை திரும்புகின்றனர்.

இவ்வாறு மக்கள் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மூலமாக சென்னைக்கு வந்துகொண்டிருப்பதால், புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அதிலும் தாம்பரம், பெருங்களத்தூர், பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு குறைந்த தூரத்தை கடக்க அதிக நேரம் ஆவதால், மக்கள் கடும் அவதியடைந்தனர்.