டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் இணைந்த மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு காங்கிரசில் உடனடி பதவி வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி, அவர் காங்கிரஸ் கட்சியின்  விவசாயப்பிரிவு செயல் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

அரியனா மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வடமாநிலங்களில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டள்ளது. இந்த நிலையில், பிரபல மல்யுத்த வீரர்களான பஜ்ரங்புனியா, வினேஷ் போகத் ஆகியோர், திடீரென ராகுல்காந்தியை சந்தித்துபேசினார். இதைத்தொடர்ந்து,  நேற்று மதியம், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே மற்றும் பொதுச்செயலாளர் வேணுகோபால் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர்.  இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் அரியானா சட்டசபை தேர்தலில்  காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிட இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இந்த நிலையில்,  காங்கிரசில் இணைந்த சேர்ந்த சில மணி நேரங்களிலேயே பஜ்ரங் புனியாவுக்கு விவசாயப்பிரிவு செயல் தலைவர் பொறுப்பு தரப்பட்டுள்ளது.