நெட்டிசன்:

மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு…

பூச்சரம் கையில வச்சிருக்கீங்களா.. எடுத்து காதுல சுத்திக்கீங்க..

இன்றைக்கு இங்கிலீஷ் இந்து இணையத்தில் படித்தது…

பதினான்கரைஆண்டுகளில் செங்கல்பட்டு பரணூர் டோல் வசூல் மொத்த வசூல் 245 கோடி..

அதாவது ஒரு வருஷத்துக்கு 17.5 கோடி..

ஒரு நாளைக்கு என்று பார்த்தால் சுமார் 4 லட்சத்து 80 ஆயிரம்..

கார் வேன் பஸ் லாரி பெரிய லாரிகள் என எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக கூட்டி சராசரியாகஒரு வண்டிக்கு நூறு ரூபாய் என்றாலும் ஒரு நாளைக்கு பரணூர் டோல் வழியாக 4,800 வாகனங்கள் மட்டும் தான் செல்லும்..

அதாவது நாள்முழுவதும் சென்னையிலிருந்து செங்கல்பட்டு நோக்கி 2400 வாகனங்கள்… செங்கல்பட்டில் இருந்து சென்னையை நோக்கி 2,400 வாகனங்கள்… அவ்வளவுதான் அதிகமில்லை ஜென்டில்மேன்..

அதிகாரிகள் அளவுக்கு நமக்குத்தான் கணக்கு போட வரவே மாட்டேங்குது…