சென்னை

சென்னை விமான நிலையத்தில் திடீரென உலகின் மிகப் பெரிய சரக்கு விமானம் தரை இறங்கி உள்ளது.

திமிங்கிலம் வடிவத்தில் உள்ள உலகத்திலேயே மிகப் பெரிய சரக்கு விமானமான “ஏா்பஸ் பெலுகா”என்ற சரக்கு விமானம், சென்னை விமானநிலையத்திற்கு, நேற்று இரவு வந்தது. குஜராத்தில் இருந்து தாய்லாந்து செல்லும் இந்த விமானம் வழியில், எரிபொருள் நிரப்புவதற்காகச் சென்னையில் தரையிறங்கி, எரி பொருள் நிரப்பியது.

பிறகு சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை மீண்டும் விமானம் டேக் ஆப் செய்தது. கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி, இதேபோல் எரிபொருள் நிரப்புவதற்காக  முதல்முறையாகச் சென்னை வந்தது.  இந்த விமானம் சென்னை விமான நிலையத்திலிருந்த ஊழியர்களைக் கவர்ந்தது.

இந்த ஏர் ப்ஸ் பெலுகா விமானத்தை விமானப் பணியாளர்கள், சில விமானிகள் வந்து பார்த்துச் சென்றனர். பொதுவாக ஏர்பஸ் பெலுகா விமானம் டேக் அப் மற்றும் லேண்டிங்கின் போது அதிக ஒலி எழுப்பும். அதைப் போல் நேற்றும் இந்த விமானம் தரையிறங்கிய போது அதிக சத்தம் வந்தது.

எரிபொருள் இல்லாமலே இந்த விமானம் 86,500 கிலோ எடை கொண்டது ஆகும். மேலும் 864.36 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்ட இந்த விமானம், சராசரியாக 150 டன் வரை சரக்கு ஏற்றி செல்லும்.