டெல்லி: ஆளுநர் தபால்காரர் அல்ல; மத்திய அரசின் பிரதிநிதி என உச்ச நீதிமன்றத்தில் மத்தியஅரசு வழக்கறிஞர் கூறிய நிலையில், அந்த மசோதாக்களை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைப்பது பெரும்பான்மையான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்பதையும் மறந்துவிடக் கூடாது என தலைமை நீதிபதி கூறியதுடன் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தும், நோயாளி உயிரிழந்தது போலத்தான் என காரசாரமான விவாதங்கள் நடைபெற்றது.
ஆளுநர் குடியரசு தலைவருக்கு கெடுவிதித்தது தொடர்பாக, ‘குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நேற்று 2-வது நாளாக நேற்று நடைபெற்ற விசாரணை காரசாரமாக நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், ‘நாங்கள் சட்டம் குறித்த கருத்தை மட்டுமே வெளிப்படுத்துவோம், தமிழக ஆளுநர் முடிவு குறித்து அல்ல’ என விளக்கினர்.

இந்த வழக்கில், “ஜனாதிபதி சில கேள்விகளுக்கு ஆலோசனை கேட்டிருக்கும்போது, தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கு என்ன பிரச்சனை?” என்று கேள்வி எழுப்பினர். மேலும், “நாங்கள் ஜனாதிபதியின் கேள்விகளை மட்டுமே விசாரிக்கிறோம், ஏற்கனவே அளித்த தீர்ப்பை மாற்ற மாட்டோம், வெறும் ஆலோசனை மட்டுமே வழங்குவோம்” என்று தெளிவுபடுத்தினர்.
இதை ஏற்க மறுத்த அரசியல்சாசன அமர்வு,. அப்படியென்றால் மொத்த அதிகாரமும் ஆளுநருக்குத்தான் உள்ளது என்பதுபோல உள்ளது. அந்த மசோதாக்களை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைப்பது பெரும்பான்மையான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்பதையும் மறந்துவிடக் கூடாது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்தால், அதுகுறித்த தகவலை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு தெரிவிக்கலாம். அதேநேரம் ஆளுநர் காரணமின்றி ஒப்புதல் அளிக்காமல் நீண்டகாலமாக கிடப்பில் போட்டு வைக்க முடியாது. இவ்வாறு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது தற்காலிகமானதா, நிரந்தரமானதா என்பதே இந்த விவாதத்தின் முக்கிய கருப்பொருள் என்றார்.
இதை ஏற்க மறுத்த சொலிசிட்டர் ஜெனரல் ஆளுநர் ஒன்றும் நீட்டிய இடங்களில் கண்களை மூடிக்கொண்டு கையெழுத்து போடும் தபால்காரர் இல்லை. அவர் மத்திய அரசின் பிரதிநிதி. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலமாக தேர்வு செய்யப்படும் குடியரசுத் தலைவர் மூலமாகவே ஆளுநரும் நியமிக்கப்படுகிறார். அப்படியென்றால் இதுவும் ஒருவகையில் ஜனநாயகத்தின் வெளிப்பாடே. அரசியல், பொதுப் பணியில் அனுபவம் பெற்றவர்களே ஆளுநராக நியமிக்கப்படுகின்றனர். ஒப்புதலுக்கு அனுப்பப்படும் மசோதா ஒருவரது அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் இருந்தால் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் இருக்கும் சுயவிருப்புரிமை அதிகாரத்தை ஆளுநர் அபூர்வமாக பயன்படுத்த முடியும் என்றார்.
இதைத்தொடர்ந்து பேசிய நீதிபதிகள் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவிப்பதற்கு பதிலாக, அதில் திருத்தங்களை மேற்கொள்ள பரிந்துரைக்கலாம். ஒருவேளை ஒப்புதல் அளிக்காமல் போனால் மாநில அரசு அவரை அணுகி அந்த மசோதாவை திருப்பி அனுப்பி வைக்க கோரலாம். ஒரு மசோதா முதல்முறையாக ஒப்புதலுக்கு வந்தால், அதை ஆளுநர் மறுக்கவோ, திருப்பி அனுப்பவோ முடியும். ஆனால், மறுநிறைவேற்றம் செய்து அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட முடியாது. ஆளுநர், பேரவைக்கான அதிகாரம் இரண்டும் பலனற்றுப் போகும் வகையில் செயல்படக் கூடாது என்றார்.
பின்னர் பேசிய தலைமை நீதிபதி கவாய் அரசியல் சாசன சட்டத்துக்கான விளக்கம் எப்போதும் ஒரே நிலைப்பாட்டை கொண்டிருக்க முடியாது. குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர், முதல்வர்கள், பேரவைத் தலைவர்கள் ஆகியோரின் செயல்பாடுகளை பொருத்து மாறும். ஆளுநர்கள் ஒப்புதல் அளிப்பதற்கான கால நிர்ணயம் கடந்த காலங்களில் இல்லைதான். அதனால் என்ன பயன் கிடைத்தது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தும், நோயாளி உயிரிழந்தது போலத்தான்.
இவ்வாறு கூறிய நீதிபதி, விசாரணையை இன்றைக்கு (ஆக.21) தள்ளி வைத்துள்ளார்.
இந்த வழக்கு குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் ஆளுநரின் அதிகாரங்கள் மற்றும் மாநில அரசுகளின் சட்டம் இயற்றும் உரிமைகள் பற்றிய முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளதால், அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கு குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் ஆளுநரின் அதிகாரங்கள் மற்றும் மாநில அரசுகளின் சட்டம் இயற்றும் உரிமைகள் பற்றிய முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளதால், அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.