சென்னை

சென்னையின் 5 மண்டலங்களில் 2 நாட்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட உள்ளது.

இன்று சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

”சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் குடிநீர் பிரதான குழாய் இணைக்கும் பணிகளை மேற்கொள்கிறது.

அதனால் இன்று (புதன்கிழமை) காலை 8 மணி முதல் நாளை (24-ந் தேதி) மாலை 4 மணி வரை மண்டலம் 4 தண்டையார் பேட்டை பகுதிகள், மண்டலம் 5-க்கு உட்பட்ட புரசைவாக்கம் (பகுதி), பெரியமேடு, சவுகார்பேட்டை, எழும்பூர், சிந்தாதிரிபேட்டை, மண்டலம் 6-க்கு உட்பட்ட ஓட்டேரி, அயனாவரம், பெரம்பூர், செம்பியம், மண்டலம் 8-க்கு உட்பட்ட புரசைவாக்கம் (பகுதி), கீழ்ப்பாக்கம், வில்லிவாக்கம், கெல்லிஸ், மண்டலம் 9-க்கு உட்பட்ட திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளுக்கு குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும், கூடுதல் தகவல்களுக்கு 044-4567 4567 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.“

என அறிவிக்கப்பட்டுள்ளது.