சேலம்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து, நடப்பாண்டில் 3வது முறையாக அணையின் நீர்மட்டம் முழு அளவான 120 அடி எட்டி நிரம்பி உள்ளது. இதன் காரணமாக, டெல்டாவுக்கு நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை ஏற்கனவே ஜூன் 29 அன்று முதன்முறையாக முழு கொள்ளவை எட்டியது. இதையடுத்து இந்த மாதம் ( ஜூலை) 5ந்தேதி இரண்டாவது முறையாக முழு கொள்ளவை எட்டியது. இந்த நிலையில், கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், மூன்றாவதுமுறையான முழு கொள்ளளவை எட்டிய எட்டி உள்ளத. இன்று மேட்டூர் அணை 120 அடியை எட்டி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணை என்பது தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. காவிரி டெல்டா மாவட்டங்கள் முழுவதும் மேட்டூர் அணையை நம்பியே உள்ளன இதனால் தமிழ்நாடு கர்நாடகா இடையே காவிரி பிரச்னை கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்கிறது. இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில் ஆண்டுக்கு 177.25 டிஎம்சி நீரை கர்நாடகா தமிழகத்திற்கு திறக்க வேண்டும் எனவும், அதனை காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்து கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தது. இதனால் காவிரி மேலாண்மை ஆணையம் கூடி ஒவ்வொரு மாதமும் தண்ணீர் திறப்பு தொடர்பாக உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது.
காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் கடந்த ஆண்டு பெய்த மழையின் காரணமாக காவிரியில் தமிழகத்திற்கு அதிகமான தண்ணீர் திறக்கப்பட்டதால் பிரச்னை ஏற்படவில்லை. இதனால் மேட்டூர் அணையும் கடந்த 250 நாட்களுக்கு மேலாக 100 அடியைத் தாண்டி நீடித்து வருகிறது.
இதனால் கடந்த ஜூன் 12ஆம் தேதி வழக்கம் போல குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அதே சமயம் கர்நாடகாவின் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளிலும் கனமழை பெய்ததால் கபினி, கேஆர்எஸ் என இரு அணைகளில் இருந்தும் அதிகப்படியான தண்ணீர் தமிழகம் வந்தது. இதனால் ஜூன் 28ஆம் தேதி மேட்டூர் அணை தனது முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனால் உபரி நீர் அதிகளவில் வெளியேற்றப்பட்டு நீர்மட்டம் குறைந்தது. ஆனாலும், அதிகப்படியான நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணைஇந்த ஆண்டு இரண்டாவது முறையாக நிரம்பியது. எனினும், கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் இருந்து நீர்வரத்து குறைந்ததாலும், நீர் வெளியேற்றம் காரணமாகவும் நீர்மட்டம் சரிந்தது. இந்த நிலையில் மீண்டும் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.
தற்போது, கர்நாடகாவில் மீண்டும் மழை வெளுத்து வாங்கத் தொடங்கியுள்ளது. இதனால் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு சுமார் 22,063 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. இதேபோல கேஆர்எஸ் அணையில் இருந்தும் 17,721 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் கிடு கிடுவென உயரத்தொடங்கியது. ஜூலை 19ந்தேதி மாலை 4 மணி நிலவரப்படி 119.64 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 120 அடி எட்டியது.
இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் மீண்டும் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 22,500 கனஅடியில் இருந்து 31,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.