சேலம்: அதிமுக ஆட்சியில் நீர்நிலைகள் முறையாக தூர்வாரப்படவில்லை என மேட்டூர் அணை மற்றும் நீரேற்று நிலையத்தில் ஆய்வு நடத்திய அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டினார்.

மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளதால், அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை நீர் இருப்பு பற்றியும். உபரி நீரேற்று திட்டப்பணிகளை விரைவு படுத்தும் பணியை அரசு மேற்கொண்டுள்ளது. இந்த பணிகளையும், ஆய்வு செய்தவதற்காக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மேட்டூரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இன்று காலைமேட்டூர் அணையை பார்வையிட்ட அமைச்சர், . அப்போது அணையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், தற்போதைய நீர் இருப்பு, மழையையொட்டி அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் அங்கிருந்து மேட்டூர் திப்பம்பட்டி சென்றவர், அங்கு நடந்து வரும் பிரதான நீரேற்று நிலைய பணிகளை ஆய்வு செய்தார். சேலம் மாவட்டம், மேட்டூர் திப்பம்பட்டி யிலிருந்து உபரி நீரை எம்.காளிப்பட்டிக்கு நீரேற்று மூலம் நீர் வழங்கும் பணிகள் குறித்து கேட்டறிந்தவர்,  சோதனை முறையில் ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்படுவதை பார்த்து அந்த பணிகளின் நிலையை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும் இந்த திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் உள்ள வறண்ட 100 ஏரிகளுக்கு தண்ணீர் வழங்குவதற்கான திட்டப்பணிகளை முழுமையான செயல்பாட்டிற்கு கொண்டு வரவும், விரைந்து நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், அதிமுக ஆட்சியில் நீர்நிலைகள் முறையாக தூர்வாரப்படவில்லை என்று குற்றம் சாட்டியதுடன், சத்தியத்திற்கு கட்டுப்பட்டே நீர்நிலைகளில் இருந்து தண்ணீர் வெளியேறாமல் உள்ளது என்று தனது பாணியில் கூறினார்.

அமைச்சர் துரைமுருகன் ஆய்வின்போது, நீர்வளத்துறை அரசு கூடுதல் செயலாளர் சந்தீப் சக்சேனா, பொதுப்பணித்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., மாநகர் மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட பொறுப்பாளர் செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ. சதாசிவம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.