ண்டிகர்

ன்று காலை 8 மணிக்கு அரியானா மற்றும் காஷ்மீரில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்க உள்ளது.

கடந்த 5-ந்தேதி  பாஜக ஆளும் அரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடந்த தேர்தலில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அரியானா மாநிலத்தில் அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஆட்சியை மக்கள் யாரிடம் அளித்துள்ளார்கள் என்பது இன்று பிற்பகலுக்குள் தெரிந்து விடும்.

ஏற்கனவே காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் 90 தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாக நடந்த தேர்தலி பதிவான ஓட்டுகளும் இன்று எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் மையங்களில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. காவல்துறையினருடன் ராணுவமும் இணைந்து பல அடுக்கு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்பு ஒருங்கிணைந்த மாநிலமாக இருந்த காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்த பின்னர் நடைபெற்ற முதல் தேர்தல் என்பதால், இதன் முடிவுகள் நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கும் இன்று பிற்பகலுக்குள் தேர்தல் முடிவுகள் தெரிந்துவிடும்.