பெங்களூரு

காவல்துறையினர் பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டரை போக்சோவில் கைது செய்துள்ளனர்.

பிரபல டான்ஸ் மாஸ்டர் ஜானி என்கிற ஷேக் ஜானி பாஷா விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட், வாரிசு உள்ளிட்ட படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றி உள்ளார் இவர் தன்னை பலமுறை பலாத்காரம் செய்ததாக இளம் பெண் நடனக் கலைஞர் கொடுத்த புகார், ஒட்டுமொத்த திரை உலகையும் உலுக்கியது. தற்போது 21 வயதை எட்டியுள்ள பெண் நடனக் கலைஞர் தான் மைனராக இருந்த போதே அவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக, தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

இந்த புகாருக்குப் பின்னர், ஜானி மாஸ்டர் தலைமறைவானதால் ஹைதராபாத் காவல்துறை அவரைத் தேடி வந்தது. அவருடைய வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், ஜானி மாஸ்டர் தலைமறைவானது உறுதியானது. இன்று அதாவது, செப்டம்பர் 19ஆம் தேதி ஜானி மாஸ்டரை ஹைதராபாத் காவல்துறையினர் பெங்களூரில் கைது செய்துள்ளனர்.

புகார் அளித்த பெண் ஜானி மாஸ்டர் டீமில் இருந்து விலகி நடன இயக்குநராகவும் செயல்பட்டு வருகிறார். அவர் மிகவும் தைரியமாக ஜானி மாஸ்டர் மீது பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். தன்னிடம் ஹைதராபாத், சென்னை, மும்பை என படப்படிப்புக்குச் சென்ற இடங்களில் எல்லாம் ஜா தன்னிடம் பாலியல் வன்கொடுமை செய்ததாக என புகார் அளித்துள்ளார். ஐதராபாத் ராய்துர்காம் காவல் நிலையத்தில் நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு எதிராக போக்சோ வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.