உளுந்தூர்பேட்டை

நேற்று நடந்த ம்து ஒழிப்பு மாநாட்டில் விசிக 13 தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளது.

நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விசிகவின் மது ஒழிப்பு மாநாடு நடந்தது. திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆனி ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தேசிய துணைத் தலைவர் உ.வாசுகி மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் மாநாட்டில் பங்கேற்றனர்

விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாட்டில் மொத்தம் 13 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

* மது மற்றும் போதைப்பொருட்கள் ஒழிப்புக்கான விழிப்புணர்வு பரப்பு இயக்கத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களை ஈடுபட்ட வேண்டும்.

* தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்.

* குடி நோயாளிகளுக்கும், போதை அடி நோயாளிகளுக்கும் நச்சு நீக்க சிகிச்சை அளிக்க டி-அடிக்ஷன் மையங்களை அரசு உருவாக்க வேண்டும்.

* மது மற்றும் போதை அடிமை நோயாளிகளுக்கான மறு வாழ்வு மையங்களை அனைத்து வட்டாரங்களிலும் அமைத்திட வேண்டும், அவர்களின் குடும்பங்களுக்கு நிதி வழங்க வேண்டும்;

* டாஸ்மாக் – அரசு மது வணிக தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வழங்க வேண்டும்

* மது மற்றும் போதை அடிமை நோயாளிகளுக்கான மறு வாழ்வு மையங்களை அனைத்து வட்டாரங்களிலும் அமைத்திட வேண்டும், அவர்களின் குடும்பங்களுக்கு நிதி வழங்க வேண்டும்.

* அரசமைப்புச் சட்ட உறுப்பு எண் 47ன்-படி மதுவிலக்கை தேசியக் கொள்கையாக அறிவிக்க வேண்டும். மது விலக்கு சட்டம் இயற்ற வேண்டும்.

* மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலங்களுக்கு சிறப்பு நிதி, கூடுதல் நிதி பகிர்வு அளிக்க வேண்டும்.

* மதுவிலக்கு விசாரணை ஆணையம் அமைத்திட வேண்டும்.

* தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு ஏதுவாக, மதுபான கடைகளை மூடுவதற்கு கூறிய கால அட்டவணையை அரசு அறிவித்திட வேண்டும்.

* பால பிரஜாபதி அடிகளார் கோரிக்கையை ஏற்று விசிகவின் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டில் ‘ அய்யா வைகுண்டர்’ பிறந்தநாளில் (மாசி 20) மதுக்கடைகளை மூட வேண்டும்.

என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.