சென்னை: ’வருண்குமார் ஐ.பி.எஸ் மன நல ஆலோசனை பெறும் நேரம் வந்துவிட்டது’ என்றும், விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் அவர் அதிகாரியாக இருக்க தகுதியற்றவர் என சீமான் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
திருச்சியில் மாவட்ட கண்காணிப்பாளராக இருந்தபோது மிகவும் பிரபலமானவர் வருண்குமார். பின்னர் பதவி உயர்வு பெற்று திருச்சி சரக டிஐஜி ஆக பணியாற்றி வந்தார். இவரை ஆகஸ்டு மாதம் தமிழ்நாடு அரசு, சென்னையில் சிபிசிஐடி பிரிவின் டிஐஜி ஆகிய நியமனம் செய்தது. தற்போது அவர் சென்னையில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

இந்த நிலையில், உயர்நீதிமன்றத்தில் சீமான் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், ’வருண்குமார் ஐ.பி.எஸ் மன நல ஆலோசனை பெறும் நேரம் வந்துவிட்டது’, நியாயமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் வருண்குமார் ஐ.பி.எஸ். அதிகாரியாக இருக்க தகுதியற்றவர் என காட்டமாக கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, வருண்குமார் ஐபிஎஸ், சீமான் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் தீவிரமடைந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் நேரடியாக மோதிக்கொள்ளலாம் என சீமான் சவால் விடுத்திருந்தார். அதுபோல நீ என்ன பெரிய அப்பாடக்கரா என்றும் வருண்குமாரை சீண்டி இருந்தார்.
இதற்கிடையில், வருண்குமார் ஐபிஎஸ், தமக்கு எதிராக ஆதாரம் இல்லாமல் அவதூறு கருத்துகளைத் தெரிவிக்கச் சீமானுக்குத் தடை விதிக்கக் கோரியும், ரூ.2.10 கோடி மான நஷ்ட ஈடு கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
‘இது தொடர்பாக வருண்குமார் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அவருக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்கக்கூடாது என சீமானுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில், சீமானுக்கு எதிராக ரூ.2.10 கோடி மான நஷ்டஈடு கோரி வருண்குமார் தொடர்ந்த வழக்கு, உயர் நீதிமன்றத்தில் நீதிபதி பி.தனபால் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது சீமான் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.சங்கர் ஆஜராகி பதில் மனுவை தாக்கல் செய்தார். அதில், ஐபிஎஸ் அதிகாரியான வருண்குமார் எனக்கு எதிராக தெரிவித்துள்ள புகார்கள் உண்மைக்கு புறம்பானவை. அவரது வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல.
டெல்லியில் ஐபிஎஸ் அதிகாரியாக பயிற்சியி்ல் இருந்தபோது பிரியதர்ஷினி என்பவருக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஆனால் அவரை திருமணம் செய்து கொள்ள அளவுக்கு அதிகமாக வரதட்சணை கேட்டதாக எழுந்த புகாரின்பேரில் வருண்குமாருக்கு எதிராக வரதட்சணை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதன்பிறகு அவர் ராமநாதபுரம் எஸ்பியாக பணியாற்றியபோது டிவிட்டரில் தனது சொந்த கருத்துகளை பதிவிட்டதற்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவரின் நடத்தை களுக்கு இந்த சம்பவங்களே சாட்சி.
வருண்குமார் குறித்தும், அவரது குடும்பம் குறித்தும் தனிப்பட்ட முறையில் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. எனது கட்சி நிர்வாகியான சாட்டை துரைமுருகன் மீது பழிவாங்கும் நோக்கில் வழக்குகளை பதிவு செய்தார் என்பதற்காக, ஒரு காவல்துறை அதிகாரியாக அவரது செயல்பாடுகள் குறித்து மட்டுமே விமர்சிக்கப்பட்டது.
தனிப்பட்ட எனது அரசியல் ஆதாயத்துக்காக யாரையும் விமர்சித்தது கிடையாது.
ஆனால் ஐபிஎஸ் அதிகாரியான வருண்குமார் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக நினைத்துக்கொண்டு என்னையும், கட்சி நிர்வாகிளையும் தொடர்ந்து அவதூறாக விமர்சித்து வருகிறார்.
நியாயமான இந்த விமர்சனங்களை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றால் அவர் ஐபிஎஸ் அதிகாரியாக பதவி வகி்க்கவே தகுதியவற்றவர். அவருக்கு உளவியல் ரீதியாக ஆலோசனை தேவைப்படும் நேரம் இது.
எனவே, எனக்கு எதிரான இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு பதில் மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனுமீதான அடுத்த விசாரணை நவ.11ந்தேதி நடைபெற உள்ளது.
தொடரும் மோதல்: ‘நீ அவ்வளவு பெரிய அப்பா டக்கரா?’ என வருண்குமார் ஐபிஎஸ்-ஐ நார் நாராய் கிழித்த சீமான்…
அரசியல் கட்சி தலைவர்போல அட்ராசிட்டி: காவல்துறை அதிகாரி வருண்குமார் – சீமான் மோதல் உச்சக்கட்டம்
https://patrikai.com/ntk-leader-seeman-cornered-by-dmk-government-cases-filed-in-succession-will-he-be-arrested-soon-62-cases-filed-in-last-three-days/