ரசிகர்களின் தொடர் தொந்தரவால், முறையான அறிவிப்பு வரும்வரை காத்திருக்கவும் என்று ‘வலிமை’ படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதுவரை ‘வலிமை’ படக்குழுவினர் தரப்பிலிருந்து படப்பூஜை அன்று மட்டுமே அதிகாரபூர்வமாக அறிக்கை வெளியானது. அதற்குப் பிறகு எந்தவொரு தகவலையுமே படக்குழு வெளியிடவில்லை.

இதனால் ரசிகர்தாள் ‘வலிமை’ அப்டேட் வேண்டும் என்று ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வந்தனர்.

இந்தப் போக்கு அதிகரிக்கவே, ‘வலிமை’ படக்குழுவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

” ‘வலிமை’ அப்டேட் கேட்டுக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு, படப்பிடிப்பில் தனக்கு ஏற்பட்ட காயங்களைக் கூட பொருட்படுத்தாமல் குறித்த நேரத்தில் படப்பிடிப்பு நடக்க வேண்டும் என்று கடுமையாக உழைக்கும் அஜித் குமார், அனுபவமிக்க தயாரிப்பாளர் போனி கபூர் ஆகிய இருவரும் ஒருங்கிணைந்து ‘வலிமை’ அப்டேட் குறித்து முடிவெடுத்து தகுந்த நேரத்தில் வெளியிடுவார்கள்.

முறையான அறிவிப்பு வரும்வரை காத்திருக்கவும். அவர்களது முடிவுக்கு மதிப்பு தரவும்”.

இவ்வாறு ‘வலிமை’ படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.