வாஷிங்டன்:  வெளிநாடுகளின் மீது மானாவாரியாக வரிகளை உயர்த்தி சலசலப்பை ஏற்படுத்தி வரும், அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 100 சதவீதம் வரி விதிக்கப்படும் ன்று டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த புதிய வரி விதிப்பு  நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சீன பொருட்களுக்கு ஏற்கனவே 30 சதவிகிதம்  இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், நவம்பர் 1ம் தேதி முதல்  மேலும் 100 சதவிகிதம் வரி விதிக்கப்படுவதுடன்,  சீன இறக்குமதி பொருட்களுக்கான வரி  130 சதவீதமாக அதிகரிக்க உள்ளது.

இந்த நிலையில் தென்கொரியாவில் நடைபெறும் எபிஇசி கூட்டத்தில் பங்கேற்க உள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகிய இருவரும் நேரில் சந்தித்து பேச இருந்தனர். ஆனால், சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி விதித்துள்ள அதிபர் டிரம்ப் இம்மாத இறுதியில் சீனா அதிபரை சந்திக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில்,  நவம்பர் 1ம் தேதி முதல், தாங்கள் தயாரிக்கும் ஒவ்வொரு பொருளின் மீதும் பெரிய அளவிலான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்கப் போவதாக, உலகிற்கு மிகவும் விரோதமான கடிதத்தை அனுப்புவதன் மூலம் சீனா வர்த்தகத்தில் அசாதாரணமான ஆக்கிரமிப்பு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இது விதிவிலக்கு இல்லாமல் அனைத்து நாடுகளையும் பாதிக்கிறது. அதிக வரி விதித்தால் அமெரிக்காவில் மின்சாதனங்களின் தயாரிப்பு பாதிக்கும் அபாயம் இருக்கிறது.

இந்த திட்டம் பல ஆண்டுகளுக்கு முன் அவர்களால் வகுக்கப்பட்டு உள்ளன. இது சர்வதேச வர்த்தகத்தில் முற்றிலும் கேள்விப்படாதது, பிற நாடுகளுடன் கையாள்வதில் ஒரு தார்மீக அவமானம். சீனா இந்த முன்னோடியில்லாத நிலைப்பாட்டை எடுத்துள்ளது. நவம்பர் 1ம் தேதி முதல், சீனாவுக்கு மேலும் 100 சதவீத வரி விதிக்கப்படும். அனைத்து முக்கியமான மென்பொருட்களிலும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிப்போம். வர்த்தகத்தில் நியாயமற்ற நடைமுறைகளை சீனா கையாள்கிறது என கூறியுள்ளார்.

சீன பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்பட்ட நிலையில் அமெரிக்க பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.