வாஷிங்டன்

மெரிக்க நீதிமன்றம் முன்னாள் அதிபர் டிரம்ப் பதிவுகளை அளிக்கக் கால தாமதம் செய்ததற்காக டிவிட்டருக்கு ரூ.2.9 கோடி அபராதம் விதித்துள்ளது.

உலகெங்கும் டிவிட்டர் என்று பிரபலமாக அறியப்பட்ட சமூக வலைத்தளம் தற்போது எக்ஸ் என்று பெயர் மாற்றம் பெற்று இயங்கி வருகிறது. உலகில் அரசியல், திரைத்துறை உள்ளிட்ட பல  பிரபலங்கள் தங்கள் அதிகாரப் பூர்வ பதிவுகளை டிவிட்டர் மூலம் வெளியிடுகின்றனர்

கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு குற்ற வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் பற்றிய டிவிட்டர் பதிவுகளை வழங்க அந்த நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. மேலும் தேடுதல் வாரவிடும் பிறப்பித்து இருந்தது.

டிவிட்டர் நிறுவனம் நீதிமன்றம் கேட்ட தகவல்களை வழங்கத் தாமதம் செய்து வந்தது. குறிப்பிட்ட காலத்திற்கு மேலும் தகவல்களைத் தர தாமதம் செய்ததாகக் கூறி டிவிட்டர் நிறுவனத்துக்கு ரூ.3.5 லட்சம் அமெரிக்க டாலர் அபராதமாக விதித்து நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது. அபராதத் தொகை இந்திய மதிப்பில் ரூ.2.89 கோடியாகும்.