வாஷிங்டன்: ஐ.நா பொதுக்கூட்டத்தில் பாலஸ்தீன அதிபர் பங்கேற்பதை தடுக்கும் வகையில், அவரது விசாவை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்தார்.

ஐ.நா. பொதுச் சபையின் (UNGA 80) 80வது அமர்வு செப்டம்பர் 9, 2025 செவ்வாய்க்கிழமை தொடங்கும். உயர்மட்ட பொது விவாதத்தின் முதல் நாள் செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 23, 2025 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளி யானது. அவர் ஐ.நா சபை கூட்டத்தில் கலந்துகொள்வதை தடுக்கும் விதமாக, அமெரிக்க அரசு அவரது விசாவை ரத்து செய்துள்ளது.
அமெரிக்காவின் இந்த திடீர் நடவடிக்கை, பாலஸ்தீன மக்களுக்கும், அந்நாட்டு அதிபருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில், பல மேற்கத்திய நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க உள்ளதாக அறிவித்துள்ளன. இது, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியா, பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் இருந்து வருகிறது. இதையடுத்து விசா ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த விசா ரத்து சம்பவம், இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
இந்த சூழலில், பாலஸ்தீனம் ஐ.நா.வில் தனி நாடாக அங்கீகரிக்கப்படுவதற்கு மேலும் ஆதரவு திரட்டலாம் என்ற அச்சத்தில் அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்திருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த செயல் சர்வதேச அளவில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது,