தெலுங்கானா மாநிலம் சித்திபெட்டில் 3 வயது பெண் குழந்தையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக உ.பி.யைச் சேர்ந்த 20 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்.

சித்திபெட்டில் பெயிண்டராக வேலை பார்த்து வந்த அந்த இளைஞன் அந்த கட்டுமான பணி நடைபெறும் இடத்தின் வாட்ச்மேனாக இருக்கும் நேபாள நாட்டைச் சேர்ந்த குடும்பத்தின் குழந்தையிடம் இந்த பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார்.

விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை தனது அறைக்குள் அழைத்துச் சென்ற இளைஞன் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நிலையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை காணாமல் தேடிய வாட்ச்மேனாக இருக்கும் அந்த குழந்தையின் தாத்தா அந்த இளைஞன் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் குழந்தையை மீட்ட அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதுடன் காவல்நிலையத்திலும் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து தெலுங்கானாவில் இருந்து தனது சொந்த ஊரான உ.பி. மாநிலம் கொராக்பூருக்கு தப்பிச் செல்லும் நோக்கத்தில் இருந்த அந்த இளைஞனை சித்திப்பெட் பேருந்து நிலையத்தில் காவல்துறையினர் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். இதுகுறித்த விசாரணை தொடர்ந்து வருகிறது.