டெல்லி: நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதில் அளித்தனர். அதன் விவரம் வருமாறு.

 5 கோடிக்கும் அதிகமான வழக்குகள் தேக்கம்

நிலுவையில்  கொலிஜியத்தின் 205 பரிந்துரைகள் 

பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு?

35 சதவீத குழந்தைகள் வளர்ச்சி குன்றியுள்ளனர்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று (ஜூலை 26ந்தேதி) மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பல்வேறு துறை தொடர் பாக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அந்தந்த துறை மந்திரிகள் பதிலளித்தனர்.

மக்களவையில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், அவை விரைவில் தீர்க்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து  உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.

இதற்கு பதில் கூறிய மத்திய சட்டஅமைச்சர்  அர்ஜுன் ராம் மேக்வால், , ‘நாடு முழுவதும் உள்ள கோர்ட்டுகளில் 5 கோடிக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அதன்படி, உச்சநீதிமன்றத்தில் 84,045 வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் மாநிலங்களில் உள்ள பல்வேறு உயர்நீதிமன்றங்களில் 60.11 லட்சம் வழக்குகளும் நிலுவையில் இருக்கின்றன. மற்றும்,  மாவட்ட மற்றும் துணை கோர்ட்டுகளில்தான் 4.53 கோடிக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவித்த மேக்வால், இதில் 1.18 கோடிக்கும் அதிகமான வழக்குகள் உத்தரபிரதேச கோர்ட்டுகளில் உள்ளதாகவும்  இதற்கு காரணம் குறித்து கூறியவர், நீதிமன்ற  உள்கட்டமைப்பு வசதி குறைபாடு, ஊழியர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள்  என்றவர்,

உயர்நீதிமன்ற   நீதிபதி நியமனங்கள் தொடர்பாக ஐகோர்ட்டு கொலீஜியம் அனுப்பியுள்ள 205 பரிந்துரைகள் அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும்  தெரிவித்தார்.

இதைப்போல ஆயுஷ்மான் பாரத்  திட்டத்தில் மூத்த குடிமக்களை இணைக்கும் திட்டம் உள்ளதா என்பது தொடர்பான  உறுப்பினரின் கேள்விக்கு பதில் கூறிய மத்திய  சுகாதாரத்துறை இணை மந்திரி பிரதாப் ராவ் ஜாதவ , ‘ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை இணைக்கும் வகையில் நிபுணர் குழு எதையும் அமைக்கவில்லை. இதைப்போல பிரீமியம் பங்களிப்பின் அடிப்படையில் தற்போதுள்ள பயனாளிகளுக்கு மேல் திட்டத்தை விரிவுபடுத்தும் பரிந்துரை எதுவும் இல்லை’ என்று தெரிவித்தார்.

பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கப்படுமா என்று உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறிய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி அன்னபூர்ணா தேவி,  அனைத்து பணியிடங்களிலும் பணிபுரியும் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்குவதை கட்டாயமாக்கும் பரிந்துரை எதுவும் அரசிடம் இல்லை என  பதிலளித்தார்.  ஆனால்,  10 முதல் 19 வயதுக்குட்பட்ட இளம்பெண்களிடையே மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்தை அரசு செயல்படுத்தி வருவதாகவும்  கூறினார்.

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு அரசு எந்த உதவிகளை செய்து வருகிறது என்ற கேள்விக்கு,  நாடு முழுவதும் 6 வயதுக்கு உட்பட்ட 8.57 கோடி குழந்தைகளை ஆய்வு செய்ததில் 35 சதவீதம் பேர் வளர்ச்சி குன்றியவர்களாக கண்டறியப்பட்டு உள்ளதாக கூறிய அன்னபூர்ணா தேவி, 17 சதவீதம் பேர் எடை குறைவாகவும், 6 சதவீதம் பேர் கடுமையான ஊட்டச்சத்து குறைவுடன் காணப்பட்டதாகவும் தெரிவித்தார். வளர்ச்சி குன்றிய குழந்தைகளில் அதிகபட்சமாக 46.36 சதவீதம் பேர் உத்தரபிரதேசத்தில் கண்டறியப்பட்டதாகவும், லட்சத்தீவுகள், மராட்டியம், மத்திய பிரதேசம் போன்றவை அடுத்தடுத்த இடங்களில் இருப்பதாகவும் கூறினார். இவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது என்றார்.

இதுபோல வெளிநாடுகளில் படிக்க செல்லும் இந்திய மாணவர்கள் இறப்பதை தவிர்க்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் என்ன என கேட்கப்பட்ட கேள்விக்கு,  பதில் கூறிய மத்திய  வெளியுறவு இணை மந்திரி கீர்த்திவர்தன் சிங் , கடந்த 5 ஆண்டுகளில் 633 இந்திய மாணவர்கள் பல்வேறு காரணங்களால் வெளிநாடுகளில் இறந்திருப்பதாக அதிகபட்சமாக 172 பேர் கனடாவில் மரணித்ததாகவும் அவர் கூறினார்.

ரெயில்வே திட்டடங்கள்   தொடர்பாக   மாநிலங்களவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் எழுத்து மூலம் பதிலளித்தார். அப்போது அவர், 22 பெட்டிகளை கொண்ட மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 12 பெட்டிகள் ஏ சி அல்லாத பொது மற்றும் படுக்கை வசதி கொண்டவையாகவும், 8 பெட்டிகள் பல்வேறு நிலையிலான ஏ சி பெட்டிகளாவும் இருக்கும் என தெரிவித்தார்

. உஞ்சாகர்-அமேதி ரெயில் வழித்தடம் தொடர்பாக மறுஆய்வு செய்ய இருப்பதாக கூறிய அஸ்வினி வைஷ்ணவ். ஏற்கனவே திட்டமிடப்பட்ட வழித்தடம் சலோன் தொழில்துறை பகுதி வழியாக செல்வதால் சாத்தியமில்லை என கண்டறியப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.