டெல்லியின் முன்கேஷ்பூர் பகுதியில் இன்று 52.3 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவானதாகத் தகவல் வெளியானது.

இந்த நிலையில் இதுபோன்ற அதிகளவு வெப்பம் பதிவாக வாய்ப்பே இல்லை என்று மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜூ தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், கடந்த சில நாட்களாக டெல்லியில் உள்ள 8 வானிலை கண்காணிப்பு மையங்கள் மற்றும் 15 தானியங்கி வானிலை நிலையங்கள் (AWS) நிலையங்களில் பதிவான வெப்ப அட்டவணையையும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

டெல்லியின் மற்ற பகுதிகளை விட முன்கேஷ்பூர் பகுதியில் கடந்த சில நாட்களாக அதிகளவு வெப்பம் பதிவாகி இருப்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர் அந்த தானியங்கி வானிலை நிலைய கருவியில் சென்சார் கோளாறு ஏதும் உள்ளதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.