மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் முக்கிய ரயில் திட்டங்களுக்கான நிதி குறைக்கப்பட்டது அம்பலமாகியுள்ளது. ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி குறித்த விவரங்கள் அடங்கிய பிங்க் புக் மூலம் இந்த நிதி குறைப்பு அம்பலமாகியுள்ளது.

* காட்பாடி-விழுப்புரம் இரட்டை ரயில் வழித்தட திட்டத்துக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டது; தற்போது தாக்கல் செய்யப்பட்ட முழு பட்ஜெட்டில் வெறும் ரூ.1,000 மட்டுமே ஒதுக்கீடு

* சேலம்-கரூர்-திண்டுக்கல் இரட்டை ரயில் வழித்தட திட்டத்துக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.150 கோடி ஒதுக்கீடு; தற்போதைய முழு பட்ஜெட்டில் வெறும் ரூ.1,000 மட்டுமே ஒதுக்கீடு

* ஈரோடு-கரூர் இரட்டை ரயில் பாதை திட்டத்துக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டது. ஈரோடு-கரூர் இரட்டை ரயில் பாதை திட்டத்துக்கு தற்போதைய முழு பட்ஜெட்டில் வெறும் ரூ.1,000 ஒதுக்கீடு

* மொரப்பூர்-தருமபுரி 36 கி.மீ. புதிய ரயில் வழித்தட திட்டத்துக்கு இடைக்கால | பட்ஜெட்டில் ரூ.115 கோடி அறிவிக்கப்பட்டது. தற்போது மொரப்பூர்-தருமபுரி ரயில் வழித்தட திட்டத்துக்கு வெறும் ரூ.49 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. 2019 தேர்தலுக்கு முன் மொரப்பூர்-தருமபுரி புதிய ரயில் பாதைக்கு அப்போதைய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அடிக்கல் நாட்டினார்

* ஈரோடு-பழனி புதிய ரயில் பாதை அமைக்க இடைக்கால பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டது. ஈரோடு-பழனி 91 கி.மீ. புதிய ரயில் பாதை திட்டத்துக்கு தற்போது வெறும் ரூ.1,000 மட்டுமே ஒதுக்கீடு

* திண்டிவனம்-செஞ்சி-திருவண்ணா இடையே 70 கி.மீ. புதிய ரயில் பாதை அமைக்க இடைக்கால பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கீடு; திண்டிவனம்-செஞ்சி-திருவண்ணா புதிய ரயில் பாதை திட்டத்துக்கு தற்போது வெறும் ரூ.1,000 மட்டுமே ஒதுக்கீடு

* திண்டிவனம்-நகரி இடையே 179 கி.மீ. தொலைவுக்கு புதிய ரயில் பாதை அமைக்க இடைக்கால பட்ஜெட்டில் ரூ.350 கோடி ஒதுக்கீடு; பாதை திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு தற்போது ரூ.153 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி, 2024-25க்கான முழுமையான பட்ஜெட்டில் குறைக்கப்பட்டுள்ளதை அடுத்து தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.