சென்னை: ஜூலை 15 முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்..-  நடத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர்  முக ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

வருகிற ஜூலை 15 முதல் மகளிர் உரிமைத் தொகைக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று தஞ்சாவூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கூறிய முதல்வர் ஸ்டாலின்,   தொடர்ந்து பேசும்போது,  ” மக்களின் குறைகளை போக்குவதற்காக உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளத. மாநிலம் முழுவதும்  10,000 உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்படும்” என்றார்.

மக்களின் குறைகளை தீர்க்க, அரசு சேவைகளை பெற ஜூலை 15ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் வரை தமிழ்நாடு முழுவதும் 10,000 இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்திலும் அறிவிக்கப்பட்டுள்ளது.