டெல்லி: பட்டப்படிப்பை முடித்த 180 நாள்களுக்குள் கல்லூரி மாணவர்களுக்கு பட்டம் வழங்கபட வேண்டும் என்று அனைத்து கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் ஏராளமான அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் பட்டப்படிப்பு முடிக்கும் மாணாக்கர்களுக்கு பட்டப்படிப்புக்கான சான்றிதழ் வழங்குவதும் காலதாமதம் செய்யப்படுகிறது. இதனால் இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. இதுதொடர்பாக ஏராளமான புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பட்டப்படிப்பை முடித்த 180 நாள்களுக்குள் கல்லூரி மாணவர்களுக்கு பட்டம் வழங்க பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து யு.ஜி.சி. அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், பட்டப்படிப்பை முடித்த மாணாக்கர்களுக்கு அவர்களுக்கு உரிய பட்டம் 180 நாள்களுக்குள் வழங்க வேண்டும். பட்டங்களை தாமதமாக வழங்குவது மாணவர்களின் வேலை வாய்ப்பில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.எனவே, 180 நாள்களுக்குள் பட்டம் வழங்காத பல்கலைக்கழகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]