சென்னை

திமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மழைநீர் வடிகால் பணிகள் குறுத்து வெள்ளை அறிக்கை கேட்டதற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

 

தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது . எனவே தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இன்று, சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களைசேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி நிவாரண உதவிகளை வழங்கினார். அவர் .சென்னை கனமழையில் பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கினார்.

பிறகு உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம்<

”மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்ற நோக்கில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

மழைநீர் வடிகால் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரி உள்ளார்.  ஆனால் தற்போது சென்னையில் மழைநீர் எங்கும் தேங்காமல் இருப்பதே வெள்ளை அறிக்கை தான்.

எனத் தெரிவித்துள்ளார்.