
ஆயுத பூஜை விடுமுறைக்கு ஆர்யா நடிப்பில் 2 படங்கள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால்-ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘எனிமி’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படம் ஆயுத பூஜை விடுமுறையைக் கணக்கில் கொண்டு அக்டோபர் 14-ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா- சுந்தர்.சி நடிப்பில் உருவாகி வரும் ‘அரண்மனை 3’ நீண்ட நாட்களாக தயாரிப்பில் உள்ளது. இந்தப் படத்தினை அக்டோபர் 14-ம் தேதி வெளியிடலாம் என்று திட்டமிட்டு விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியுள்ளது.
அவ்வாறு வெளியிடப்பட்டால் ஒரே தேதியில் இரண்டு ஆர்யா படங்கள் வெளியாகும் சூழல் ஏற்படும்.
[youtube-feed feed=1]