துனிஸ்’

துனிஷியா அதிபர் கெய்ஸ் சயீத் அந்நாட்டுக்கு புதிய பிரதமரை நியமித்துள்ளார்

துனிஷியா நாட்டின் பிரதமராக இருந்தஅகமது ஹச்சானி யை அந்நாட்டின் அதிபர் கெய்ஸ் சயீத் பதவியில் இருந்து நீக்கினார். தற்போது அவருக்கு பதிலாக சமூக விவகார மந்திரி கமல் மதூரியை புதிய பிரதமராக, அதிபர் சயீத் நியமித்து உள்ளார்.

இந்த முடிவில் வேறு விவரங்களை அதிபர் அலுவலகம் வெளியிடவில்லை. கடந்த மே மாதத்தில் அரசாங்கம் பகுதியளவு மாற்றியமைக்கப்பட்டதன் ஒரு பகுதியாக நடப்பு ஆண்டு மே 25-ந்தேதி சமூக விவகார துறை மந்திரியாக மதூரி நியமிக்கப்பட்டார்.

கடந்த 1974 ஆம் வருடம் பிறந்த மதூரி, அதற்கு முன் தேசிய சுகாதார காப்பீடு நிதியமைப்புக்கான தலைவராக பதவியில் இருந்துள்ளார்.  வரும் அக்டோபர் 6-ந்தேதி நடைபெற உள்ள துனிஷியா அதிபர் தேர்தலில் 2-வது முறையாக கெய்ஸ் சயீத் மீண்டும் போட்டியிடும் முடிவில் உள்ளார்.